இரண்டு நாட்களுக்கு
முன்பு மெரினாவுக்குச் சென்றேன். காந்தி சிலைக்கருகில் நின்று பார்த்தால், பீச்சே
(அதாவது மணல் பரப்பு) கண்ணுக்கு தெரியவில்லை. அவ்வளவு கடைகள்! மூவாயிரத்துக்கும் அதிகம்
என்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பீச்சுக்குள்
நாம் வளைந்து வளைந்து நடந்து செல்ல கடைக்காரர்களே ஒற்றையடிப் பாதை ஒன்றை ஏற்படுத்தித்தந்தால்
பெரிய விஷயம்! அப்படியென்றால், மக்கள் காற்றாட எந்த இடத்திலும் உட்காரவே முடியாதா?
‘தகவல்’ தங்கவேலு என்கிற என் நண்பர் (நிருபர்!) என்னிடம் சொன்னார் – “கவலைப்படாதீர்கள்.
இந்த பிரச்சனையை தீர்க்க, செங்கல்பட்டுக்கருகே 25
ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இன்னொரு மெரினா பீச்சை அரசு உருவாக்கும் திட்டம் ஒன்று
இருக்கிறது. இதே போல ஒரு காந்தி சிலையை கூட வைக்கபோகிறார்கள். அங்கே மக்களுக்காக மட்டுமே
மணல் ஒதுக்கப்படும். பீச்சுக்கு செல்கிறவர்கள் முதலில் நம்.1 பீச்சுக்கு சென்று பட்டாணி சுண்டல், மாங்காய், மிளகாய் பஜ்ஜி’யெல்லாம்
வாங்கிக் கொண்டு, அங்கிருந்து, ஸ்பெஷலாக போகும் பறக்கும் ரெயில் வண்டிகளில் ஏறி, செங்கல்பட்டு
பீச்சுக்குப் போக வசதி செய்து தரப்படும். ஆகவே, மக்கள் கவலைப் பட வேண்டாம்!”
No comments:
Post a Comment