Friday, 26 April 2013

அடேங்கம்பானி!

அம்பானி வீடு (மொத்தமும்!)

முதன் முறையாக நம் நாட்டில் ஒரு மகா கோடீஸ்வரருக்கு உச்சக்கட்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு தர மத்திய உள்துறை இலாகா ஏற்பாடு செய்திருக்கிறது! விரைவில் இது பெருமையான - status symbolஆக கருதப்பட்டு, மகா கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதே பாதுகாப்பை எதிர்பார்க்கலாம்! ஆக மொத்தத்தில் இந்திய ஏழை நாட்டுக்குள் ‘பணக்காரர்கள் நாடு’ என்கிற ஒன்று தனியாக உருவாகியிருப்பது புரிகிறது. இதையடுத்து அம்பானிகளுக்கு என்று தனி கொடி, தூதுவர், மற்றும் ஐ.நா’வில் கெளரவ அங்கத்தினர் பதவி...இதெல்லாம்தான் பாக்கி! ஸோ, விரைவில் பெரும் செல்வந்தர்கள், நம் நாட்டுத் தெருக்களில் அரசியல் தலைவர்களைப் போல ஜீப்புகள், பைலட் மோட்டார்சைக்கிள்கள் சூழ AK-47 ஏந்திய இருபதுக்கும் மேற்பட்ட கமாண்டோக்களுடன்தான் எங்கும் போவார்கள். ஜீப்புகளில் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகள் மட்டுமே இப்போதைக்கு இருக்காதென்று தெரிகிறது. ஆனால் இதெல்லாம் இலவசமாக தரப்படப்போவதில்லை. அம்பானி அதற்காக மாசம் 15 லட்சம் ரூபாய் அரசுக்கு தர வேண்டுமாம். அம்பானியின் மதிப்பு (!) இரண்டு லட்சம் கோடி ரூபாய். இந்த கணக்குபடி பார்த்தால், எனக்கும் ‘Z’ பாதுகாப்பு தரப்பட்டால் அதற்காக மாதந்தோறும் நான் எவ்வளவு அரசுக்கு தரவேண்டியிருக்கும்? 15 பைசா?!




1 comment: